Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
விபத்தின்போது நடந்தது என்ன...? - நடிகை யாஷிகா ஆனந்த்

Sooriyan Gossip - விபத்தின்போது நடந்தது என்ன...? - நடிகை யாஷிகா ஆனந்த்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,073 Views
மகிழுந்து விபத்தில் சிக்கித் தானும் படுகாயமடைந்து, தனது தோழியையும் இழந்து மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது சாதாரண மருத்துவ விடுதிக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில், தனது விபத்துக்கு குறித்து எழுந்த செய்திகளுக்கு விளக்கமளித்துள்ள அவர், “சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். கார் ஓட்டும்போது நான் மது அருந்தி இருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் மது அருந்தவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் மது அருந்தி இருந்தால் இப்போது மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன், சிறையில் தான் இருந்திருப்பேன்.

போலியான நபர்களால் போலி செய்திகள் பரப்பப்படுவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் கொஞ்சம் மனிதத் தன்மையையும், இறந்த என் தோழிக்காக கொஞ்சம் துக்கத்தையும் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அத்துடன், வைத்தியர்களின் அறிக்கையும் இதையே தான் சொல்லும். போலியான ஊடகங்கள், தமக்கான விளம்பரங்களைத் தேடிக்கொள்ள போலியான செய்திகளைப் பரப்புகின்றனர். என்னைப் பற்றிய அவதூறு பரப்பும் சிலருக்கு எதிராக 2 வருடங்களுக்கு முன்பும் அவதூறு வழக்கு தொடுத்திருந்தேன் என்பதையும் இந்தவேளையில் நினைவுபடுத்துகின்றேன்.

எனது உடல்நிலையைப் பொறுத்தவரை, தற்போது அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. அதிர்ஷ்டவசமாக முகத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை” எனக் கூறியுள்ளார் யாஷிகா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top