ஒரு திரைப்படத்தில் உச்சிக்கு போவதும், அதே நேரம் ஒரே திரைப்படத்தில் பாதாளத்துக்கு வருவதும் சினிமாவில் தான் சாத்தியம்.
நடிகை நயன்தாராவின் 'டோரா' திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து, சில விதிகளை அவர் தளர்த்திக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 'மாயா' திரைப்படத்தை அடுத்து நயன்தாராவின் மார்க்கெட் மிகவும் உயர்ந்திருந்தது.
ஆனால், டோராவுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் சரியத்தொடங்கியுள்ளது. அதனால், தன் சொந்த திரைப்படத்தை வெளியிட முடியாத நிலையில் உள்ளார்.
இந்நிலையில், தனது விதிகளை அவர் தளர்த்த தொடங்கியுள்ளாராம்.
அதாவது இதற்கு முன்னர் சீனியர் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த அவர், தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேருகிறார்.
மேலும் தமிழில் மட்டுமே நடித்து வந்த அவர், வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.