கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இலங்கையில் மாத்திரமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை தோன்றுவித்தது.
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் 13 வயதான ஹரிஸ்ணவி என்ற மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதனை அடுத்து நாடு முழுவதும் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பல பெண்கள் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. ஆண்டுகள் இரண்டு கடந்தும் இந்த சிறுமிக்கான நீதி கிடைக்காமை எமக்கும் நெஞ்சை பதற வைக்கிறது.