நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த எரிகல் வரும் ஏப்ரல் 29ம் திகதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. ஆனால் வாய்ப்பு மிக குறைவு என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது நாசா.