அமெக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 28ம் திகதி நள்ளிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெதானந்த குருப்பு என்ற இலங்கையேரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
அவரது இரு மகள்களும் அங்கு கல்லூரி ஒன்றில் கல்விகற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மகள்களில் ஒருவரின் வயது 23 எனவும் மற்றையவரின் வயது 19 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கடையை அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே வாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிட வந்த இருவரில் ஒருவர் துப்பாக்கியால் குருப்புவை சுட்டுள்ளார். சுடப்படுவதற்கு முன்னர் அவர் கொள்ளைக்காரர்களுடன் மோதலிலும் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகி இருந்தமையை ஆதாரமாக கொண்டு, 19 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றுமொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.