தொடரின் 39 ஆவது லீக் போட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணியும் ,K.L ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் இன்று ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன.
நடப்புத்தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி, அபார வெற்றியைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னை அணி களமிறங்கவுள்ளதாக சென்னை அணியின் தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.