தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடுகள் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக இந்த கூட்டம் இன்று நடைபெறவிருந்தது.
எனினும் இந்த கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த கூட்டமைப்பின் மாகாண சபை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை அடுத்ததாக இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.