கேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பில் அனைவரும் தினமும் செய்திகளை அறிந்து வருகிறோம்.
இந்நிலையில் உலக புகழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த வரலாற்று பேரழிவை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸில் இசை நிகழ்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இந்த இசை நிகழ்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலை ரஹ்மான் பாடினார்.
இந்த பாடல் முடிவடையும் போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொர்ரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என்று ரஹ்மான் பாடினார்.
இதன்போது குறித்த இசை நிகழ்சியில் இருந்த அனைவரும் பலத்த கரகோஷ்ங்களை எழுப்பினர்.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.