கடந்த சில தினங்களாக நடிகை ஸ்ரீ ரெட்டி பரவலாகப் பேசப்பட்ட ஒருவராக மாறினார்.
திரையுலகில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான தொல்லைகளை பற்றி இவர் வாய் திறக்க ஆரம்பித்ததும், பல சர்ச்சைகள் எழுந்தன.
தற்போது இவர் பல முன்னணி நட்சத்திரங்களை பற்றி திடுக்கிடும் செய்திகள் வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி மற்றுமொரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
''ஒரு காலம் வரும் போது, திரையுலகம் முழுவதுமே ஆபாசம் இனி இல்லை எனக் கூறும் நேரம் வரும்.அந்த நம்பிக்கையுடன் எனது போராட்டம் தொடர்ந்து இடம்பெறும்'' என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.