தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் வளமாக வைத்து கொள்கிறது. பலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அதிகளவு தண்ணீர் குடிப்பார்கள். எனினும் இப்படியான சந்தர்ப்பத்தில் நாம் நீர் அருந்தக் கூடாது. ஏனென்றால் இவை குடல் பகுதிக்குச் சென்று வேறு விதமான பக்க விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் பொதுவாகவே இரவு நேரத்தில் சிறுநீரகம் சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில் உங்களின் முகம், காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.
சாப்பிடும் போது, சாப்பிட்ட பிறகு, அதற்கு முன்பு என எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறைத் தரும். மேலும் மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்ப வெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.
போத்தலில் நாம் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வரத் தொடங்கும். எனவே, போத்தலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள்.
தாக்கம் எடுக்கும் போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பைத் தரும். மேலும் உயிருக்கே பெரும் ஆபத்து ஏற்படலாம்.