நமது உடலுக்கு எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது. அதிலும் முக்கியமான ஒன்று பொட்டாசியம். மன அழுத்தத்திற்கும், சீரற்ற ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்கக் கூடிய அழுக்குகள் இலகுவாக வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்து கொள்ளவும், பொட்டாசியம் மிகவும் உதவியாக இருக்கிறது.
அத்தோடு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் பொட்டாசியக் குறைபாடு ஏற்பட்டால் ,ஏராளமான உடல் கோளாறுகள் உண்டாகும். ஆனால், இதயக் கோளாறுகள் முதல் சிறுநீரக பிரச்சினை வரை அனைத்தையும் இந்த சத்தால் குணப்படுத்த முடியும்.
இப்போது பொட்டாசியம் நிறைந்த காய்கனிகளை உண்டால், என்னவெல்லாம் எம் உடலில் மாறுதல் ஏற்படும் எனத் தெரிந்து கொள்வோமா?
உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது நல்லது . ஏனெனில், இதிலுள்ள பொட்டாசியம், அப்போதுதான் அப்படியே நமக்குக் கிடைக்கும். அத்துடன் இரும்புச் சத்து, விட்டமின் பி6, சி, நார்சத்து போன்றவையும் சேர்ந்து கிடைக்கும்.
பீட்ரூட் ,இதய நோய்கள் வரும் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது. அத்தோடு சீரான ரத்த ஓட்டத்தையும் தரும்.
முளைக்கீரையில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. பார்வைக் குறைபாடு, எலும்புப் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
ஒவ்வொரு நாளும் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு, முழு ஆரோக்கியத்தையும் நமக்குக் கொடுக்கும்.
தக்காளியை நாம் ஒதுக்காமல் சாப்பிட்டு வந்தால், உடல் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், பலவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பது நூறுவீதம் உண்மையான விடயம்.
அவகாடோவானது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையானது.
எங்கள் உடல் எடையை சீராக வைத்து கொள்ளவும், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கவும், நாம் ஒவ்வொரு நாளும் யோகட் சாப்பிட்டு வந்தால் நல்லது.