ஈராக்கில் கம்பீரமாக நிற்கும் சித்திரம் ராமரையும் வணங்கும் அனுமனையும் குறிப்பதாகவும், இந்த உருவச்சித்திரம் குறித்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை, ஆராச்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வை மேற்கொள்ள இந்திய ஆராச்சி குழு, ஈராக்கின் தர்பந் ஐ பெலுலா, என்ற மலையில் கையில் வில் ஒன்றை ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் ஒன்றையும் செருகி, மேலாடை அணியாமல் மன்னர் ஒருவர் நிற்க, அவரை ஒருவர் வணங்குவது போன்றதொரு உருவச்சித்திரம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சித்திரம் ராமரை அனுமன் வணங்குவது போன்று உள்ளது என்று இந்தியத்தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இந்த சிற்பம் கி.மு 2000-ம் ஆண்டில் வாழந்த பழங்குடியினத் தலைவனையும், அவரால் சிறைபடுத்தப்பட்ட எதிரியையும் குறிப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.