அமெரிக்காவிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவசரமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று, 2,700 மெகா டன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சிறுகோளிற்கு அஸ்டிராடு FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று நாசாவின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நாசா கணித்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
அஸ்டிராடு FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் 2019 ஒக்டோபர் 3 ஆம் திகதி, பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டிச் செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது தான், ஆனால் இச் சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயமாக விலகி பூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று, நாசா பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.