நடிகர் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள்.
இயக்குனர் எழிலின் இயக்கத்தில் முதல் படம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 திகதி வெளியானது. விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம். இது வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படமும் கூட.
காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்னர் இளைய தளபதி விஜய்யின் மிக முக்கியமான படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்துக்கும் ஒரு தனி இடம் இன்றும் உள்ளது எனலாம்.
அந்த ஆண்டின் தமிழக அரசின் இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது , எம்.ஜி,ஆர் விருது, சிறந்த நடிகைக்கான விருது என பல விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்தது.அதே நேரம் இந்தப் படத்திற்குக் கிடைத்த அதீத வரவேற்பால் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
படத்தில் எஸ்.எ.ராஜ்குமார் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள் "மேகமாய் வந்து போகிறேன்... ,இன்னிசை பாடிவரும்...,இருபது கோடி நிலவுக்கள்...,தொடு தொடு எனவே..."ஆகிய பாடல்கள் அப்போதும் இப்போதும் வானொலி,தொலைக்காட்சிகளில் ரசிக்கக்கூடியதாகவே உள்ளது. இப் பாடல்களே படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாயிருந்தன.
21 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது "துள்ளாத மனமும் துள்ளும்"