மது அருந்துவதால் உடலில் பல பிரச்சனைகள் வரும் என தெரிந்தும் அதிகமாக மது அருந்தும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ரத்தம் சிறுநீர் மாதிரிகளை கொண்டு மது அருந்தும் அளவு கணக்கிடப்படுகின்றது, அதனால் பலர் இந்த பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்துவிட்டு பெரிய வருத்தங்கள் வரும்போதுமட்டும் வைத்தியர்களை நாடிச்செல்வார்கள். இந்த வழக்கத்தை மாற்றி ஆரோக்கியமான பிரஜைகளாக இருக்கவேண்டும் என்பதற்காக உடனுக்குடன் தெரிவிக்கும் மின்னணு சாதனத்தை நெதர்லாந்து அறிமுகம் செய்துள்ளது.
நெதர்லாந்தில் மூன்றில் ஒரு பங்கு குற்றங்கள் குடிபோதையால் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் அருந்தும் மது அளவை வியர்வை மூலம் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள கால் மணிக்கட்டில் அணியும் மின்னணு சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மின் அணு சாதனத்தை அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சாதனத்தை அணிவதால் மது அருந்தும் எண்ணம் தங்களுக்கு ஏற்படுவதில்லை என மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.