ஜெர்மனி அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சோகமான சம்பவம் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. இங்கு 6 குழந்தைகளுடன் ஒரு பெண் வசித்து வந்த நிலையில் இந்த பெண்ணினுடைய தாயார் தன்னுடைய மகளின் வீடடில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஏதோ நடக்கிறது என்பதை அறிந்து சொலிங்கின் நகர பொலிஸாரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கின்றார்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை விரைந்து சென்று பார்த்தபோது, ஒரு குழந்தை உயிருடனும் மற்றய ஐந்து குழந்தைகளும் உயிர் அற்ற நிலையில் இருப்பதனைப்பார்த்து பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக அந்த குழந்தைகளின் தாயாரைத்தேடிய போது. குறித்த தாய் தனது குடியிருப்புக்கு அருகில் உள்ள டுஸ்சில்டோர்ஃப் ரயில் நிலையித்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதனால் குறித்த தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டமையினால் தன்னுடைய குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொள்கின்றனர் .இதனால் குறித்த தாய் முழுமையாக குணமடைந்து வந்தவுடன் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.