West Indies win T20 World Cup - சிக்சர் மழை பொழிந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,370 Views
ஆறாவது 20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இந்த தொடரின் இறுதி போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோய் ரூட் 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்று வெற்றிகண்டது.
இதன்போது இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் நான்கு ஆறு ஓட்டங்களைப் பெற்ற கார்லோஸ் ப்ரத்வைற், மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு வழி ஏற்படுத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சாமுவெல்ஸ், 9 நான்கு ஓட்டங்கள் இரண்டு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 85 ஓட்டங்களை பெற்றதுடன், ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.
20க்கு20 உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் தொடர் நாயகனாக இந்தியாவின் விராத் கோலி தெரிவு செய்யப்பட்டார்.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது தடவையாகவும் 20க்கு20 உலக கிண்ணத் தொடரை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற மகளிருக்கான 20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.