தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜித் தற்போது "விவேகம்" படத்தில் நடித்து வருகிறார். தற்போது நீலாங்கரையில் இருக்கும் தனது பங்களாவிலிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரும் அஜித், அடுத்த புதிய படத்தை ஆரம்பிக்கும்போது தனது அரண்மனை போன்ற புதிய வீட்டில் குடியேறவுள்ளார்.
நீலாங்கரையிலிருந்து இடம் மாறும் 'தல' அஜித், திருவான்மியூரில் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வீட்டில் தனக்கும், தனது தொழிலுக்கும் வேண்டிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளாராம் 'தல'. அத்துடன், நவீன ரக உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உயர்தர ஜிம் ஒன்றையும் குறித்த வீட்டிலேயே உருவாக்கும் வேலையில் மும்முரமாக உள்ளாராம்.
இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய வீட்டின் 60% நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த நிர்மாணப்பணிகளை அஜித்தின் மனைவி ஷாலினி மேற்பார்வையிட்டு கவனித்து வருகிறாராம்.
இதேவேளை, தற்போது நீலாங்கரையில் உள்ள பங்களாவில் இருக்கும் 'தல' அஜித், தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனியாக வீடு கட்டிக் கொடுத்து, அவர்கள் தினமும் வேலைக்கு வந்து செல்வதற்கு இலகுவாக, போக்குவரத்து ஏற்பாட்டையும் செய்துகொடுத்துள்ளார் என மனம் நெகிழ்கின்றனர் அவர்கள்.