கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.பலக்கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் முடிவு எட்டப்படவில்லை. மேலும் குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியும் விவசாயிகள் நடத்தப்பட்டது.இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரி மாவட்டம் அருமனை அருகே பொறியாளர் ஒருவர்,தனது திருமணத்தின் போது டிராக்டரில் மணமகளுடன் ஊர்வலமாக வந்து,விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.