அவ்வாறு சரியான உறக்கம் இல்லாதபோது, அது பல ஆபத்துகளை விளைவிக்கும்.
பெண்கள் கர்ப்பக் காலத்தில் தூக்கமின்றி தவிப்பதைப் பார்த்திருக்கிறோம்.
இந்த பிரச்சனை ஏற்படுவதற்குக் காரணம், அவர்களுக்கு அதிக பயம் தொற்றிக்கொள்வதாகும்.
மாதந்தோறும் அவர்களது எடை கூடுவதால், மன அழுத்தம் உண்டாகும்.
அவ்வப்போது சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கும். இதனால் கூட அவர்களது தூக்கம் பாதிக்கிறது.
பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், மதியம் மற்றும் மாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் தூங்குவது இயல்பு.
இதனால் அவர்களது இரவு நேர தூக்கம் பாதிக்கப்படுகிறது.
எனினும் குழந்தையை பிரசவித்ததும், உடல் எடையை வழமைக்கு கொண்டு வர முடியும்.
எனவே கர்ப்பிணிப் பெண்கள், இத்தகைய சிந்தனைகளை கைவிடுவது சிறந்ததாகும்.