இமைக்கா நொடிகள், அடங்க மறு படங்களில் நடித்த ராஷி கண்ணா , தற்போது விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார், இதையடுத்து விஜயசந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் இருந்தவர் ராஷி கண்ணா. ஆனால் கடந்த ஆண்டில் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்ததை அடுத்து கோலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தார். அப்படி வந்தவருக்கு சித்தார்த்துடன் சைத்தான் கா பச்சா என்ற படம் கிடைத்தது. ஆனால் அந்தபடம் இன்னும் திரைக்கு வரவில்லை.
தற்போது, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கும் ராஷி கண்ணா, தமிழில் அதிக படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, அடிக்கடி சென்னையில் முகாமிட்டு தீவிர பட வேட்டையில் இறங்கியிருக்கிறார். தொடர்ந்து தமிழில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் ராஷி கண்ணா.