நேற்று முன்தினம் இரவு, இவர் தனது படுக்கை அறையில் வைத்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணின் உடல், 80 சதவீதம் கருகியிருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட போது, அதிர்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி, குறித்த பெண்ணின் மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர் சிகரெட் புகைக்கும் போது, அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.