இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இலங்கையில் 134 பேர், இவ் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் 07 பேர் இன்று வரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தொற்றினால் பாதிக்கப்பட்ட 478 பேர் இப்போது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.