Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
சூர்யாவிற்கு மடல் வரைந்த ஹரி - முடிவை மாற்றுவாரா சூர்யா....???

Sooriyan Gossip - சூர்யாவிற்கு மடல் வரைந்த ஹரி - முடிவை மாற்றுவாரா சூர்யா....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
நடிகர் சூர்யா தானே தயாரித்து நடித்து வெளியீட்டிற்குத் தயாரான நிலையில் வைத்திருக்கும் திரைப்படம் "சூரரைப்போற்று".
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் அதிதீவிரநிலை நிலவுகின்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மிக முக்கிய இடத்தில் காணப்படுகின்ற காரணத்தினால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முடக்கநிலை பேணப்படுவதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், வெளியீட்டிற்குத் தயாரான படங்கள் அனைத்தும் திரை காணாமல் படப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், "சூரரைப்போற்று" திரைப்படமும் திரை காணத் தயாராகி நான்கு மாதங்கள் கடந்துவிட்டபோதும், இன்னும் படப்பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதால் தயாரிப்பாளரான தான் நட்டத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி அமேசான் பிரைம் ஓடிடியில் படத்தை வெளியீடு செய்வதற்கான வேலைகளில் நடிகர் சூர்யா மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

தனது இந்த முடிவை திரைத்துறை சார்ந்தவர்கள் உட்பட அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அண்மையில் அறிக்கை ஒன்றினூடாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்த சூர்யாவிற்கு திரைத்துறை சார்ந்த பெரும்பான்மையானவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், ஒரு தயாரிப்பாளராக அவருக்கு உள்ள கஷ்ட நெருக்கடிகளை புரிந்துகொண்ட சிலர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கல் நிலை தொடர்பில், சூர்யாவை வைத்து பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான ஹரி, நடிகர் சூர்யாவுக்கு தனது நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்: ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஒடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்.

தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்” என உரிமையுடன் கருத்து கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top