கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்களிடையே எளிதில் பரவுகிறது. குறிப்பாக வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றில் உள்ள நீர்துளிகள் மூலமாக மற்றவர்களுக்கு வேகமாக பரவுகிறது. மேலும், கொரோனா நோயாளி ஒருவர் பயன்படுத்திய பொருட்களில் கூட வைரஸ் உயிர்வாழ முடியும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனாலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நுளம்பு, வெவ்வேறு மனிதரின் இரத்தத்தை குடிப்பதால், அது கொரோனாவை பரப்புமா என ஆய்வு செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸை நுளம்பின் உடலில் செலுத்தப்பட்டதும், பல்கிப் பெருகாமல் அழிவது தெரியவந்தது. இதையடுத்து, நுளம்பால், கொரோனா பரவாது என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.