கொரோனா பாதிப்பினால் இப்போது எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லா கட்டிடங்களிலும் நுழையும் முன் முகக்கவசம் அணிந்திருப்பது, தொற்றுநீக்கம் செய்வது, உடல் வெப்பநிலையினை பரிசோதிப்பது என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பாதுகாப்பு பணியாளர்களினால் செய்யப்படுகின்றது.
இந்தியாவில் திருச்சியில் உள்ள ஆடை கடையில் ‘ஜஃபிரா’ எனும் பிரத்யேக பெண் ரோபோவை பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும்
‘ஜஃபிரா’ எனும் பெண் ரோபோவை பயன்படுத்தியுள்ளனர்.