திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இன்றுடன் சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகும் நிலையில்,சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து 'திரையுலகை ஆண்டது போதும்... தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...!' என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன்,தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர்.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.