இந்தியாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், திருமணமான ஒரே மாதத்தில் உடலமாக மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் குறித்த இளம்பெண், திடீரென தனது வீட்டில் உள்ள கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இதன்போது குறித்த பெண்ணின், கழுத்து அறுக்கப்பட்டிருந்ததுடன், உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன.
எனவே இது ஒரு கொலையாக இருக்கலாம்,என, காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குறித்த பெண்ணின் கணவரையும், அப்பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே பெண்ணின் உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்த விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.