மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள்.மருத்துவக் குணம் கொண்டது மல்லிகைப் பூ. இந்த காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவை தான். ஆனால் இவற்றைக் காட்டிலும் அதிகம் கேள்விப்பட்டிருக்காதப் பலவித நன்மைகளை மல்லிகைப் பூக்கள் கொண்டுள்ளன.
மல்லிகைப் பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்து வர சிறுநீரகப் பிரச்சினை, வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய உதவும்.அதுமட்டுமல்ல கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சியைக் குறைத்து படிப்படியாகப் பார்வை தெரிய ஆரம்பிக்கும்.
மல்லிகைப் பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையுமாம்.
மல்லிகைப் பூக்களை நீர் விட்டுக் கொதிக்கவைத்து தினமும் அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும். அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும், வாய்ப்புண்களுக்கும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
ஊட்டச்சத்து குறைவினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்களுக்கு மல்லிகைப் பூக்களை நிழலில் காயவைத்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
மல்லிகைப்பூவை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் அதனை அருந்தி வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்னைகள் குணமடையும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்துப் போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்.
பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்தலாம். மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்டத் தழும்புகள், அரிப்புகள் குணமடையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைக்கும் போது மன அழுத்தமும் குறைவதோடு உடல்சூடும் மாறும்.
இதுபோன்ற பல மருத்துவக் குணங்கள் கொண்டதுதான் மல்லிகை பூ.