பட்டத்துயானை படத்தின் மூலமாக, வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். அழகாய் இருக்கிறார், நடிக்கவும் தெரிந்திருக்கிறது, ஆனாலும், ஒரு படத்தோடு யாரும் பின்னர் இவர் வீட்டு கதவை தட்டவில்லையே என கோடம்பாக்கமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
இந்நிலையில், அப்பாவின் இயக்கத்தில் மூன்று மொழிகளிலும் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக ஐஸ்வர்யாவே சொல்கிறார்.
''வேறு யாராவது இயக்குனர்கள் படமென்றால் சொல்வதை நடித்துவிட்டு போய் விடலாம். இது அப்பா படம். அவருக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. அதனால், கஷ்டப்பட்டு நடிக்கவேண்டிய கடமை இருக்கிறது. ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. உறுதியானதும் அப்பாவே அறிவிப்பார். நான் இப்படத்தில் கதக் நடனக் கலைஞராக வருகிறேன் '' என்று பேசுகிறார் ஐஸ்வர்யா.
பார்க்கலாம், அப்பவின் படமாவது இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புக்களை வாங்கிக் கொடுக்கிறதா என்று??
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-