சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் மாதம் 5-ஆம் தேதியும், திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதியும் வெளியாகும் என சினித் தகவல்கள் தெரிவிக்கின்றன .அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என நம்பப்படுகிறது.
படத்தின் பல காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை `கபாலி' படப் பாணியில் நடத்த மோகன் ராஜா முடிவு செய்துள்ளார். அதற்காக, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா பயணமாகி உள்ளதாக தகவல். அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் பிரமாண்டமான முறையில் அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் அமர்க்களமாக படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இனி என்ன வேலைக்காரனுக்கு செம வேலைதான் போங்க....