தமிழ் சினிமா முழுவதும் இப்போது BiggBoss பிரபலங்கள் தான் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்த ஹரிஷ் கல்யாண் நிறைய விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.
இந்த பேட்டியில் , உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு , நான் ரஜினி மற்றும் தளபதி விஜயின் தீவிர ரசிகன் என கூறிய ஹரிஷ் கல்யாண் எனக்கு மற்றைய நடிகர்களையும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார்.
அப்போது BiggBoss நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்ப்பட்டது.
அதற்கு அவர், நிகழ்ச்சியின் இறுதி நாளில் மெர்சல் டீஸர் வெளியாகிவிட்டதாக சில பேர் கூறினர்.
உடனே நிகழ்ச்சி முடிந்ததும் தனது கைப்பேசியை எடுத்து வேறு எதையும் பார்க்காமல் யூடியூப் சென்று மெர்சல் டீஸரை தான் முதலில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.