ஆவி, பேய் என்ற வார்த்தை உலகம் முழுவதும் பரவி உள்ளது. கடவுள் என்ற நல்ல சக்தி இருந்தால், அதற்கு எதிர்வினையாக கட்டாயம் தீய சக்திகள் இருக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இருளைக் கண்டு அச்சம் கொள்பவர்களுக்கு பேய், ஆவி என்பவற்றின் நம்பிக்கை அதிக அளவில் இருக்கும். இதன்படி உங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? இந்த எளிய 3 முறையை செய்து பாருங்கள்.
''பேய் மிரட்டி'' என்ற மூலிகை ஒன்று உள்ளது. இதனை தீபம் எரியும் போது கொளுத்தினால், பேய் இருக்கும் வீட்டில் நிச்சயமாக எரியும்.
''பூத வேதா உப்பு'' என்ற மூலிகையை வீட்டில் வைத்தால் பிண வாடை வீசும். பேய் இல்லாத வீட்டில் இந்த வாடை வராது என கூறப்படுகிறது.
இந்த மூலிகைகள் உங்களுக்கு கிடைக்காவிட்டால், பசு சானத்தில் பிள்ளையார் பிடித்து, அறுகம்புல்லை அதில் சொருகினால் பேய் இருக்கும் வீட்டில், அந்த பிள்ளையாரை வண்டு மொய்த்து சிதைத்துவிடும். பேய் இல்லாத வீட்டில், பிள்ளையார் கெடாமல் அதிக நாட்கள் இருக்கும்.
இதுவே உங்கள் வீட்டில் பேய் இருப்பதை கண்டுப்பிடிப்பதற்கான வழிமுறைகளாகும்.