அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியையும், இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு, ஷனான் வார்ஸ் என்ற மனைவியும் பெல்லா, செலஸ்ட் ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த குறித்த நபர், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நபர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்று குப்பைத் தொட்டிக்குள் வீசியுள்ளார்.
இதனையறிந்த அமெரிக்கக் காவல்துறையினர், சந்தேக நபரைக் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.