சர்ச்சைகளைக் கிளப்பிய ஒரு திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் ஜெயகுமார். இது தவிர, இவர் ‘ஹரஹர மகாதேவகி’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவரின் அடுத்த பட டைட்டில் ‘ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்’ என்பதுதான். இவர் இயக்கிய மூன்று படங்களை தயாரித்த ஞானவேல்ராஜா அவர்கள்தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகர் மற்றும் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படமும் அடல்ட் படமா? அல்லது காமெடி படமா? என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.
மேலும், அந்தப்படத்தில் நடித்த யாஷிகா இந்தப் படத்திலும் நடிப்பாரா என்பதும் இரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.