காதல் ரோஜாவே மூலமாக தமிழுக்கு வந்த நடிகை பூஜா குமார், அதன் பின்னர் காணாமலே போனார். எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. சினிமாவும் அவரை மறந்துவிட்டது.
அந்த நேரத்தில் தான், கமல் அவரை விஸ்வரூபம் படத்துக்காக அழைத்து வந்தார்.
பூஜாவும் கமலின் எண்ணப்படி தனது நேர்த்தியான நடிப்பை கொடுத்தார். அதுமட்டுமன்றி கமலுடனான தனது நட்பை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், மீண்டும் விஸ்வரூபம் பாகம் இரண்டில் நடிக்க ஆரம்பித்தார் பூஜா. அதுவும் தற்பொழுது திரையரங்குகளில் நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுதுதான் பிரச்சினையும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
அதாவது, பூஜாகுமாரின் வீட்டில், இனிமேல் படத்தில் நடிக்க வேண்டாமென்று மறுப்பு தெரிவிக்கப்படுவதாகவும், ஆனாலும், கமலின் அடுத்தடுத்த படங்களிலும் இவரை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், பூஜாவின் வீட்டில் பெரிய பிரச்சினையே வெடித்துள்ளதாகவும், கமல் சமரசப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.