கடந்த சில தினங்களுக்கு முன்னர், கேரளாவில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். அத்துடன் பலர் காணாமல் போனதுடன், மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் பலகோடி சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனிடையே அண்மைக்காலமாக கேரளாவில் பாம்புகளின் நகர்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் கேரள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் எலி காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதனால் ஒரு நாளில் மட்டும் கேரளாவில் 10 பேர் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
எனினும் தற்போது எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.