சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இக்கல்லறை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, குறித்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தோண்டத் தோண்ட சுரங்கத்தில் தங்கம் கிடைப்பதைப் போல, இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் பிரமிடுகளில் கல்லறைகளும், மம்மிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மிகப்பெரிய மர்மங்களை தன்னிடத்தே ரகசியமாகக் கொண்டிருப்பதாக, ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மர்மங்கள் நிறைந்த எகிப்தின் வரலாறு குறித்து கண்டறிய, பலருக்கு அதிக ஆர்வம் உள்ள நிலையில், இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அக்காலத்தில் நிலவிய கலாச்சாரத்தையும், வேறு சிலரைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.