தங்களைத் தாங்களே அழகாக வைத்திருப்பதில் எல்லோரும் அக்கறையாக இருப்பார்கள். சிலருக்கு தங்களை பராமரிப்பதற்கு நேரங்கள் போதாமல் இருக்கும். எனவே வீட்டில் இருந்த படியே உங்கள் அழகை மெருகூட்ட இதோ நல்ல இலகுவான வழிமுறைகள்.
தினமும் மூன்றிலிருந்து நான்கு லீற்றர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்கும் போது நச்சுகள் வெளியேறும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். குறைந்த பட்சம் ஒரு பழமாவது தினமும் உட்கொள்ள வேண்டும். காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். உணவில் கீரை வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
தக்காளியை மசித்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்ணின் கருவளையம் இல்லாமல் போக வெள்ளரிக்காயை தோல் சீவி வட்டமாக வெட்டி கண்களை மூடி சரியாக கண்ணுக்குள் பொருந்தும்படி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.
பப்பாளி பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பன்னீரில் (ரோஸ் வாட்டர்) பஞ்சை நனைத்து அதனை கண்கள் மீது சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். எலுமிச்சம்பழத்தின் சாற்றுடன் 2 ஸ்பூன் தயிர், கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து 15 முதல் 20 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கரட் எடுத்து அதனுடன் சிறு துண்டு வெள்ளரிக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.