ஈகுவடார் நாட்டின் தலைநகர் குய்டோவின் வடக்கு பகுதியில் வாழ்ந்து வரும் ஜூலியோ சீசர் மோரா, 110 வயது, வால்ட்ராமினா குயிண்டேரோ, 104 வயது இவர்கள் இருவரும் காதலித்து குடும்பத்தை எதிர்த்து 1941ல் திருமணம் செய்துகொண்டனர்.
உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
79 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த காதல் தம்பதிக்கு 4 பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும், 25 கொள்ளு பேரப்பிள்ளைகளும், உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட விவாகரத்து பற்றி சிந்தித்ததில்லை என்று கூறுகின்றனர். அன்பு, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை, சரியான கல்வி உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என, அந்த தம்பதியினர் புன்னகையுடன் தெரிவித்தனர்