சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மர்ம வைரஸ் மூலம் நிமோனியா கண்டறியப்பட்டது.
இந்த மர்ம வைரஸ் என்ன என்பதை கண்டறிய சீன ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராச்சியில், நிமோனியா காய்ச்சலுக்கான காரணம் ''SARS '' நோயை உருவாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ்கள் என கண்டறிந்தனர்.
எவ்வாறு இருப்பினும், விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவும் கொரோனா வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை மனிதர்களிடமிருந்து பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர் என வுஹான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதன் மூலத்தை கண்டறியுமாறு உலக சுகாதார அமைப்பு, சீனா அரசாங்கத்திற்கு வலியுறுத்தியது.
இதன்போதே, புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவலாம் என்பதை மறுக்க முடியாது என, சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், புதிய கொரோன வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான எந்தவொரு தெளிவான ஆதாரமும் தற்போதைய சோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது, எனினும் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.