Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டது குழந்தை - ஆச்சரியத்தில் மருத்துவத்துறையினர்.

Sooriyan Gossip - கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டது குழந்தை - ஆச்சரியத்தில் மருத்துவத்துறையினர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

693 Views
உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொவிட்-19 வைரஸானது சீனாவை முற்றுமுழுதாக முடக்கிப்போட்டிருக்கும் நிலையில், தற்போது தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் பயத்தில் உறையச் செய்திருக்கின்றது.
சீனாவைப் பொறுத்தவரைக்கும் கொவிட்-19 வைரஸினால் ஹூபே மற்றும் உஹான் ஆகிய மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான கற்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவம் நிகழ்ந்தது. குறித்த பெண் வுஹான் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை ஒன்று வாய்த்திருந்தது. இருந்தும், தாயின் மூலமாக அந்தக் குழந்தைக்கும் வைரஸ் தொற்று பாதித்திருந்ததை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்தனர் சீன மருத்துவர்கள்.

சியோசியா என்ற பெயர் கொண்ட அந்தப் பெண் குழந்தைக்கு வைரஸ் தாக்கியமை கண்டறியப்பட்டாலும், குழந்தையின் உடலில் கொவிட்-19 வைரஸ் தொற்று ஆரம்ப நிலையிலேயே காணப்பட்டமையால், பெரியவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் எவையும் அந்தக் குழந்தைக்கு வழங்கப்படவில்லை. ஆனால், கடும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது அந்த குழந்தை.

தொடர்ச்சியாக 17 நாட்கள் மருத்துவமனையின் விசேட வைத்தியர்களின் அதி தீவிர கண்காணிப்பில் இருந்த அந்தக் குழந்தை எந்தவித சிகிச்சைகளும் வழங்கப்படாமல் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து முற்றுமுழுதாக மீண்டு குணமடைந்து வீடு திரும்பியிருப்பது மருத்துவத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆச்சரிய நிகழ்வு குறித்து வுஹான் குழந்தைகள் மருத்துவமனை விஷேட வைத்தியர் சென்ங் கருத்து தெரிவிக்கையில், "குழந்தை சியோசியோவுக்கு கொவிட்-19 வைரஸ் பாதிப்பு பெரிதளவில் தாக்கவில்லை. அதனால், அந்த பெண் குழந்தையின் உடலில் எந்தவித வைரஸ் தடுப்பு மருந்துகளையும் செலுத்தவில்லை. குழந்தையின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது. அதற்கான சிகிச்சைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

கொவிட்-19 வைரஸ் உலகத்திற்கு புதியது என்பதால், பிறந்த குழந்தைகளுக்கு எப்படி..? எந்தன் மூலமாக பரவுகின்றது என்பதை கண்டறியவில்லை. இதனால், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும் போது நாம் கவனமாக செயல்பட வேண்டும்’’ என்ற அறிவுறுத்தலையும் வழங்கினார் அந்த சீன மருத்துவர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top