கியூபா நாடு மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக அறியப்படுகிறது.
ஆனால் உலகிலேயே மக்கள்தொகைக்கு அதிக விகிதமுள்ள மருத்துவர்களை கொண்ட நாடாக கியூபா அறியப்படுகிறது.
கொம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரம் தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர்.
கியூபாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 337 ஆக உள்ளது.
இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.