தனது மாமியார் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
பரீட்சையில் சித்திபெற, குழந்தை கிடைக்க, தாம் எண்ணிய விடயங்கள் நடக்க என்று பல விடயங்களுக்காக பக்தர்கள் கோவிலுக்குச் சென்று அவர்களின் நேர்ச்சையை வைப்பது வழக்கம்.
இதற்காக சிலர் பண நோட்டுக்களில் தங்களின் வேண்டுதல்களை எழுதி அதை உண்டியலில் போடுவதும் வழக்கம். ஆனால் கர்நாடகாவில் வசித்து வரும் பெண் ஒருவர் நூதனமான முறையில் தனது வேண்டுதலை பண நோட்டு ஒன்றில் எழுதி அதனை கோவில் உண்டியலில் இட்டுள்ளதுடன் உண்டியலில் இருந்த பணத்தை எண்ணிய சந்தர்ப்பத்தில் குறித்த பண நோட்டில் எழுதப்பட்டிருந்த இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனை அநேகமானவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதுடன் அவர்களது கருத்துக்களையும் நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.