ஶ்ரீ லங்கா கிரிக்கட்டின் மாகாண மட்ட இருபதுக்கு இருபது போட்டிகளின் கிண்ணத்தை மிலிந்த சிறிவர்தன தலைமையிலான கொழும்பு கமான்டோஸ் அணி கைபற்றியுள்ளது.
மாகாண மட்ட இருபதுக்கு இருபது போட்டியின் இறுதி போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாக சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் காலி காடியன்ஸ் அணியும் கொழும்பு கமான்டோஸ் அணியும் மோதின.
இதன் போது கொழும்பு கமான்டஸ் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றிருந்து.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கமான்டோஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதனடிப்படையில் , முதலில் துடுப்பாடிய காலி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் சமிந்த எரங்க 27 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
144 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொழும்பு கார்டியன் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அதில் செஹான் ஜயசூரிய 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
ஆட்ட நாயகனாக கொழும்பு கமான்டோஸ் அணியின் சமிந்த எரங்க தெரிவுசெய்யப்பட்டார்.
தொடராட்ட வீரராக அதே அணியின் தனன்ஜய தெரிவுசெய்யபட்டார்.