தற்போது பலருக்கும் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அருகில் தூங்கும் நபரின் தூக்கமும் பாதிக்கப்படுகிறது.
இந்த குறட்டை பிரச்சனையில் இருந்து விடுதலை பெற புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறட்டை விடுவதை தடுக்க பெரிய அளவிலான புல்லாங்குழல் போன்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு குறட்டை விடும் 25 பேரை வைத்து, இந்த கருவி சோதனை செய்யப்பட்டது. இவர்களில் அதிகமானவர்கள் இந்த கருவியை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.
ஏனையவர்கள் குறித்த கருவியை பயன்படுத்தவில்லை. சோதனைக்கு பின்னர் இந்த கருவியை பயன்படுத்தியவர்கள் குறட்டை விடுவதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.