மெக்சிகோ நாட்டில் உள்ள பாதாள உலகின் தலைவியான 21 வயதான Mariya Guadalupe பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமான சம்பவம் தொடர்பிலான காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
மரியா- La Catrina என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் பிறிதொரு இடத்தில் Grando Dame of Deth என்றும் அழைக்கப்படுகின்றார்.
இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் அவர் மற்றும் அவரது குழுவினர் பொலிசாரோடு நேரடியாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் 14 பொலிசார் உயிரிழந்ததோடு 9 பேர் காயமடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த மரியா அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணமானார்.அவரின் டாட்டூவை வைத்தே இறந்தது மரியாதான் என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.