1000 வருடங்களுக்கும் மேலாக உயிரோடு உள்ள கிங்க்கோ மரங்களின் ரகசியங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிங்க்கோ மரங்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன ஆனால் இந்த வகை மரங்கள் காடுகளில் அழிந்து வருகின்றன.
அந்த மரங்கள் நோய்கள் மற்றும் வறட்சியிலிருந்து தங்களைக் காத்து கொள்ள ஒரு விதமான ரசாயனங்களை உற்பத்தி செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வயதாகும் மரபு இல்லாததது" "இந்த மரங்கள் அதிக நாட்கள் வாழ்வதற்கான ரகசியம் இதுவாகும் என வடக்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரிச்சர்ச் டிக்ஸன் கூறுகிறார்.
இவை மெதுவாக வளர்ந்தாலும் பெரிதாக வளரக்கூடியது. இந்த மரங்கள் சீனாவை பூர்விகமாக கொண்டத.
"இந்த கிங்க்கோ மரங்கள் வயதானாலும் தங்களை எந்த தீங்கும் பாதிக்காமல் பார்த்துக் கொள்கின்றன." என்கிறார் ரிச்சர்ட்.