தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கத்தில் வெளியான பா பாண்டி படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஷோன் ரோல்டன்.
இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதிலும் குறிப்பாக ராஜ்கிரண் தனியாக நடித்த பாடலும் பிளாஸ்பேக் பாடலும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இதனையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார் ஷான் ரோல்டன்.
ஆனால் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் மீண்டும் தனுஷூடன் இணையாதீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கூறிய வண்ணம் இருந்து வந்தனர்.
இப்படியான நிலையில் ஷோன் ரோல்டன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுதாக கூறியிருந்தார். இதனால் மீண்டும் தனுஷ் ரசிகர்கள் தனுஷ் உடன் இணைவதாக மட்டும் அறிவிக்காதீர்கள் என கூறினர்.
இதன் காரணமாக கடுப்பான ஷோன் ரோல்டன் எனக்கு வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக இசை வேலைகளை முடிக்க மூன்று நாள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டது.
அதில் எப்படி சிறப்பான இசையை கொடுக்க முடியும். மீண்டும் தனுஷுடன் இணைவேன் ரசிகர்களை கவரும் சிறந்த இசையை கொடுத்து என்னுடைய திறமையை நிரூபிப்பேன் என கூறியுள்ளார்.