Family affected by flood living on road side - வெள்ளத்தால் தெருவுக்கு வந்த குடும்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,934 Views
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கைக்குழந்தையுடன் குடும்பமொன்று பாதையில் வாழும் மனதை உருக்கும் சம்பவமொன்று எமக்கு தெரியவந்துள்ளது. சேதவத்தை – களுபாலத்திற்கு அருகில் கூலி வீடொன்றில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் தனது நான்கு குழந்தைகளுடன் பாதையில் வசித்து வருகின்றார்.
இவர்கள் வாழ்ந்து வந்த பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தனது 4 வது குழந்தையை பிரசவிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், வீடு திரும்பும் போது அது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையே கண்டுள்ளார்.
இவர்கள் தற்போது கொழும்பு கருவாத்தோட்டம் பகுதியில் உள்ள வீதியில் வசித்து வருகின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர், அறுவை சிகிச்சை காரணமாக தற்போது மருத்துவமனையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதையில் செல்லும் சிலர் வழங்கும் உணவு பொருட்களை கொண்டு பாசியாற்றி வருகின்றனர்.